சங்க இலக்கியக் கவிதைகளைத் தேடிய பொழுது பாட்டிலக்கண முறைப்படி ஓசையொழுங்குடன் கூடிய மூலக் கவிதையினையும், பின்பு சிறிதளவு தமிழறிந்தோரும் படித்து எளிதாகப் பொருள் புரியும் வண்ணம் அவ்வரிகளைப் பிரித்த கவிதையினையும், கவிதைக்கான உரைகளையும் ஒரே இணைய தளத்தில் இந்த இணைய வெளியிலே என்னால் பார்க்க முடியவில்லை. அதை நிவர்த்தி செய்ய தன்னார்வம் கொண்டதன் விளைவே இந்தத் தளம்.
இந்த இணையத்தளம் முழுக்க முழுக்க சங்க இலக்கியம் சார்ந்த பதிவுகளையும், கவிதைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இணையவெளியில் சங்க இலக்கியத்துக்கென்று ஒரு தனித்துவம் வாய்ந்த தளமாக மிக மிகச் சொற்ப அளவிலான தளங்களே வலம் வந்து கொண்டு இருக்கின்றன அவைகளுக்கு வலுச்சேர்க்கும் தளமாக இதை மெருகேற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே எங்களது கனவு...
தளம் தொடர்பான புகார்கள், அறிவுரைகள் மற்றும் தகவல்களை எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.