அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

அகநானூறு: 333

நித்திலக் கோவை


நித்திலக் கோவை

பாலை - தலைமகள் கூற்று

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர,
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் . . . . [05]

எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி,
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, . . . . [10]

வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து,
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என,
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா . . . . [15]

நின் வாய் இன் மொழி நல் வாயாக
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
அவணர் காதலர்ஆயினும், இவண் நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, . . . . [20]

மறுதரல் உள்ளத்தர்எனினும்,
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.
- கல்லாடனார்.