அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 347
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

பாலை - தலைமகள் கூற்று
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, . . . . [05]
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, . . . . [10]
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
கெடு மகப் பெண்டிரின் தேரும் . . . . [15]
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, . . . . [05]
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, . . . . [10]
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
கெடு மகப் பெண்டிரின் தேரும் . . . . [15]
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
- மாமூலனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
தோளும் தொல்கவின் தொலைய நாளும்
நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன . . . . [05]
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் - வாழி தோழி - வாயாது
மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து . . . . [10]
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடுமகப் பெண்டிரின் தேரும் . . . . [15]
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே!
நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன . . . . [05]
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் - வாழி தோழி - வாயாது
மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து . . . . [10]
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடுமகப் பெண்டிரின் தேரும் . . . . [15]
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே!