அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 383
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

பாலை - நற்றாய் கூற்று
மகட் போக்கிய தாய் சொல்லியது.
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
காடும் கானமும் அவனொடு துணிந்து,
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, . . . . [05]
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, . . . . [10]
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
காடும் கானமும் அவனொடு துணிந்து,
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, . . . . [05]
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, . . . . [10]
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
- கயமனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்
ஊருஞ் சேரியும் ஓராங்கு அலர்எழக்
காடுங் கானமும் அவனொடு துணிந்து
நாடுந் தேயமும் நனிபல இறந்த
சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென . . . . [05]
வாடினை - வாழியோ, வயலை! - நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக்
கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு . . . . [10]
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே!
ஊருஞ் சேரியும் ஓராங்கு அலர்எழக்
காடுங் கானமும் அவனொடு துணிந்து
நாடுந் தேயமும் நனிபல இறந்த
சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென . . . . [05]
வாடினை - வாழியோ, வயலை! - நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக்
கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு . . . . [10]
ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே!