அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 338
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

குறிஞ்சி - தலைமகன் கூற்று
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்,
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் . . . . [05]
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், . . . . [10]
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் . . . . [15]
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து,
வழங்கல் ஆனாப் பெருந் துறை . . . . [25]
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
மறம் கெழு தானை அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்,
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் . . . . [05]
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், . . . . [10]
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் . . . . [15]
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து,
வழங்கல் ஆனாப் பெருந் துறை . . . . [25]
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
- மதுரைக் கணக்காயனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்
மறம்கெழு தானை அரச ருள்ளும்
அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர்
மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்
பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் . . . . [05]
அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்
'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்
துணைஈர் ஓதி மாஅ யோள்வயின்
நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் . . . . [10]
வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்
அகலிருங் கானத்துக் கொல்லி போலத்
தவாஅ லியரே நட்பே அவள்வயின் . . . . [15]
அறாஅ லியரே தூதே - பொறாஅர்
விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருந்துறை . . . . [20]
முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே!
மறம்கெழு தானை அரச ருள்ளும்
அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன்அமர்
மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள்
பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன் . . . . [05]
அணங்குடை உயர்நிலைப் பொறுப்பின் கவாஅன்
'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல்
துணைஈர் ஓதி மாஅ யோள்வயின்
நுண்கோல் அவிர்தொடி வண்புறஞ் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் . . . . [10]
வயவுஉறு நெஞ்சத்து உயவுத்துணை யாக
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன்னருந் துப்பின் வென்வேற் பொறையன்
அகலிருங் கானத்துக் கொல்லி போலத்
தவாஅ லியரே நட்பே அவள்வயின் . . . . [15]
அறாஅ லியரே தூதே - பொறாஅர்
விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள்
புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருந்துறை . . . . [20]
முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே!