அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
அகநானூறு: 351
நித்திலக் கோவை
நித்திலக் கோவை

பாலை - தலைமகன் கூற்று
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, . . . . [05]
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, . . . . [10]
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என . . . . [15]
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, . . . . [05]
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, . . . . [10]
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என . . . . [15]
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
- பொருந்தில் இளங்கீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
அறிவுறூஉம் கொல்லோ தானே - கதிர்தெற . . . . [05]
கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
புழல்வீ இருப்பைப் புன்காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி . . . . [10]
எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
வருந்துதோள் பூசல் களையும் மருந்தென . . . . [15]
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே?
பெறல்அருங் கேளிர் பின்வந்து விடுப்ப
பொருள்அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு
குறைவினை முடித்த நிறைவின் இயக்கம்
அறிவுறூஉம் கொல்லோ தானே - கதிர்தெற . . . . [05]
கழலிலை உகுத்த கால்பொரு தாழ்சினை
அழல் அகைந் தன்ன அம்குழைப் பொதும்பில்
புழல்வீ இருப்பைப் புன்காட்டு அத்தம்
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய்குறி ஆழி வைகல்தோறு எண்ணி . . . . [10]
எழுதுசுவர் நினைந்த அழுதுவார் மழைக்கண்
விலங்குவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்ப
திருந்திழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்துஅணை மீது பொருந்துவீக் கிடக்கை
வருந்துதோள் பூசல் களையும் மருந்தென . . . . [15]
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத்தொழுது உறைவி செவிமுத லானே?